Advertisment

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விசிட் அடித்த சேகர்பாபு; அடுத்த அப்டேட்!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Sekar Babu 1

கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜன.14,2023) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " ஜனவரி 24 முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்"  என்றார்.

தொடர்ந்து, " கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Advertisment

மேலும், " பண்டிகை காலங்களில் அதிகப்படியான மக்கள் கூடுவதால் சிறிய தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். கலாம் பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிகப்படியான உணவகங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்பான கேள்விக்கு, " கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் மக்களுக்கு தேவையானதை செய்ய இருக்கிறோம்; இதுவரை எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படும்" என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Minister PK Sekar Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment