Advertisment

தமிழக அரசு பஸ்களில் திடீர் சலுகை: 5 வயது வரை டிக்கெட் வேண்டாம் என அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் தற்போது 3 வயது குழந்தைகள் வரை மட்டுமே கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிற நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு பேருந்துகளில் இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள் டிக்கெட் வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக அரசு பஸ்களில் திடீர் சலுகை: 5 வயது வரை டிக்கெட் வேண்டாம் என அமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் தற்போது 3 வயது குழந்தைகள் வரை மட்டுமே கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிற நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு பேருந்துகளில் இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள் டிக்கெட் வேண்டாம் என்று சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

Advertisment

தமிழக சட்டப்பேரவையில், இன்று (மே 5) அரசு போக்குவரத்துறை மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:

தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை ரூ.70 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்படும்.

பயண கட்டண சலுகை அனுமதி சீட்டுகளை பெறுவதற்காக பயணம் மேற்கொள்வதை குறைக்கவும், எளிதாகவும், வசதியானதாகவும் பயணச் சீட்டுகள் பெறுவதற்கு அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களின் வலைதளம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக இணையதள பயணச்சீட்டு வழங்கும் ஏற்பாட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்.

சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.70.73 லட்சம் செலவிடப்படும்.

பஸ்களின் வருகை, புறப்பாடு குறித்த நிகழ்நேரத் தகவல்கள் மதுரை மற்றும் கோவை நகரங்களில் மொத்தம் 16 பஸ் முனையங்களில் இணையவழி தகவல் அமைப்பு மூலமாக காட்சிப்படுத்தப்படும்.

விழா நாட்கள் நீங்கலாக இதர நாட்களில், இணையவழிப் பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

தற்போது, 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பஸ்களிலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Minister Sivasankar Tn Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment