/indian-express-tamil/media/media_files/2025/03/23/hybKsUKhjiXPRylt3cGN.jpg)
மா.சுப்ரமணியன் ஆய்வு
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை கோவையில் அன்னூர் பகுதியில் உள்ள பொகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார்.
மேலும், சுகாதார நிலையத்தில் உள்ள மருந்து இருப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற வசதிகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டு அறிந்தார்.
சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளனவா ? என்பது குறித்தும், அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறதா ? என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
மேலும், சுகாதார நிலையத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டு அறிந்து, அவற்றை உடனடியாக சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் அங்கு நோயாளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அந்த நோயாளியிடம் அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு, சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.