கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்வதா? வங்கிகளுக்கு தமிழக நிதியமைச்சர் எச்சரிக்கை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் ரூ.1000 வழங்கப்படும் நிலையில் இதை பிடித்தம் செய்யும் வங்கிகளுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் ரூ.1000 வழங்கப்படும் நிலையில் இதை பிடித்தம் செய்யும் வங்கிகளுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Minister Thangam Thanarasu has condemned the violent incident in the Neyveli protest

1.065 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் ரூ.1000 வழங்கப்படும் நிலையில் இதை பிடித்தம் செய்யும் வங்கிகளுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

திமுக நிறுவனத் தலைவரும் மறைந்த முதல் அமைச்சருமான பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1.065 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 

இந்தத் திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு மகத்தான சாதனை நிகழ்வாகும்.
இந்நிலையில் ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மகளிரின்வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.

இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும். இதுகுறித்து மாநில வங்கிகள் குழுமத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் உரிமைத் தொகையை வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இருப்பினும் சில வங்கிகளில் இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. மகளிர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து புகார் அளிப்பதற்கு முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100- ஐ அழைத்து புகார் அளிக்கலாம்.

மகளிர் அளிக்கப்படும் இப்புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை மூலமாக  தெரிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: