/tamil-ie/media/media_files/uploads/2023/06/Express-Image-18.jpg)
சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட ஆளுநர் அறியவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வடலூர் வள்ளலார் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்,என்.ரவி கலந்துகொண்டு, "பத்தாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்" என்று தெரிவித்தார். இதற்கு மக்களிடையே பெரும் பரபரப்பு கிளம்பியது.
ஆளுநரின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமான் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம்…
— Thangam Thenarasu (@TThenarasu) June 22, 2023
"சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமான் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் அவா்கள் ஈடுபட்டிருக்கிறார்.
தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை", என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.