/indian-express-tamil/media/media_files/2025/10/17/thangam-thennarasu-3-2025-10-17-21-37-44.jpg)
சட்டப்பேரவயில் இன்று 2025-26 ஆண்டின் கூடுதல் செலவிற்கு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வழங்கினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கூட்டத் தொடரில், மிகக்குறைவான நிதி பங்கீட்டை பெறும் மாநிலம் தமிழ்நாடுதான். பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் பல மடங்கு நிதி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு 10 கேள்விகளை எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நான்காவது நாள் (அக்டோபர் 18, 2025) காலை 9:30 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் தொடங்கியது.
சட்டப்பேரவயில் இன்று 2025-26 ஆண்டின் கூடுதல் செலவிற்கு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வழங்கினார். அப்போது, கல்வி, மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை என அனைத்து துறைகளிலும் நிதி ஒதுக்குவது முதல் வரி பகிர்வு வரை அனைத்திலும் தமிழ்நாடு எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பது பற்றியும், ஒன்றிய அரசு கைவிட்டாலும் திராவிட மாடல் அரசு எவ்வாறு அரசின் திட்டங்களை மக்கள் பாதிக்காத வகையில் திறம்பட செய்யலாற்றிவருகிறது என்பதைப் பற்றியும் பேசினார்.
மேலும், சட்டப்பேரவயில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மிகக்குறைவான நிதி பங்கீட்டை பெறும் மாநிலம் தமிழ்நாடுதான். பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் பல மடங்கு நிதி வழங்கப்படுகிறது” என்று குறிப்பிட்டு, “தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்” என்று மத்திய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பினார்.
மத்திய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை அமைச்சர் தங்கம் தென்னரசு எழுப்பினார். அதன் விவரம் வருமாறு:
1.மாநில அரசுகளை ஆலோசிக்காமல் ஜி.எஸ்.டி திருத்தம் செய்தது ஏன்?
2.கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்ததற்காக தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்?
3.உ.பி, குஜராத், மகாராஷ்டிராவிற்கு அளிக்கப்படும் சாலை திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தருவதில்லை, ஏன்?
4.புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக இரயில்வேக்கு மட்டும் பாரபட்சம் ஏன்?
5.மதுரை & கோயம்புத்தூர் மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தர தாமதம் ஏன்?
6.தமிழ்நாடு நிதியில் கட்டிய வீடுகளில் பிரதமர் பெயர் ஏன்?
7.கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வழங்கவேண்டிய நிதி 1975 கோடி எங்கே? ஓய்வூதிய திட்டத்திற்கு வெறும் ரூ.200 தருகிறீர்கள். ஆனால் தமிழ்நாடு அரசு ரூ.1,200 வழங்குகிறது.
8.நிதி தராமல் புரியாத மொழியில் பெயர் மட்டும் ஏன்?
9.தமிழ்நாடிற்கு சேர் வேண்டிய ஜல் ஜீவன் திட்ட நிதி ரூ.3,709 கோடி ஏன் இன்று வரை விடுவிக்கப்படவில்லை?
10.நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாடு 6%, ஆனால், 4% மட்டும் நிதிப் பகிர்வு அளிப்பது ஏன்?” என அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.