Advertisment

சிறுமி பாலியல் வழக்கு:  நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தாமதம்; உள்துறை செயலருக்கு ரூ. 10,000 அபரதாம் - ஐகோர்ட்

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவித்த ரூ. 1 லட்சம் நிதி உதவியை வழங்குவதில் கால தாமதம் செய்த உள்துறை செயலருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Madurai

சிறுமி பாலியல் வழக்கு:  நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தாமதம்; உள்துறை செயலருக்கு ரூ. 10,000 அபரதாம் - ஐகோர்ட்

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்க ராமநாதபுரம் மாவட்டம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றக் கோரிய வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற ஏன் இவ்வளவு கால தாமதம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்க, 2022-ம் ஆண்டு  ராமநாதபுரம் மாவட்டம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக நிறைவேற்றக் கோரி சிறுமியின் தாயார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற ஏன் இவ்வளவு கால தாமதப்படுத்துகிறீர்கள் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற கால தாமதம் செய்த உள்துறை செயலருக்கு ரூ. 10,000  அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதுமட்டுமில்லாமல், ரூ. 1 லட்சம் பணத்தையும் அதனுடன் 6 சதவிகிதம் வட்டியையும் வழக்கிற்கான செலவையும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் தாக்கல் செய்த மனுவில், நாங்கள் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள், நான் எனது கணவர் மற்றும் 3 குழந்தையுடன் வசித்து வருகிறேன். டிசம்பர், 2020-ல் எனது 7 வயது மகளை, எங்கள் பகுதியில் வசிக்கக்கூடிய வேலுச்சாமி என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, போக்சோ சிறப்பு வழக்கில் அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையையும், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவியும் வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. சிறுமிக்கு இந்த ரூ. 1 லட்சம் நிதி உதவியை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் மார்ச் 2022-ல் உத்தரவு பிறபித்தது. அதன் பிறகு, நிதி உதவி தொடர்பாக நாங்கள் உள்துறை செயலருக்கு மனு அனுப்பினோம், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினோம். ஆனால், எந்த பதிலும் இல்லை. எனவே, வறுமையில் வாடும் எங்கள் குடும்பத்திற்கு, நீதிமன்ற உத்தரவுப்படி ரூ. 1 லட்சத்தை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டிருந்தார். 

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்க சிறப்பு நீதிமன்றம் அறிவித்தும் இன்னும் வழங்கப்படவில்லை என்று வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி புகழேந்தி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 சதவீத வட்டியுடன் உடனடியாக அந்த ரூ 1 லட்சம் நிதி உதவியை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், நிதி உதவியை வழங்குவதில் கால தாமதம் செய்த உள்துறை செயலருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த  10 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையையும் சேர்த்து சிறுமிக்கே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment