5 நாட்களாக சிங்கம் மாயம்: வண்டலூர் பூங்காவில் பரபரப்பு; ட்ரோன் மூலம் தீவிர தேடுதல் வேட்டை

வண்டலூர் பூங்காவில், 5 நாட்களாக 'ஷெரூ' என்ற ஆண் சிங்கம் காணாமல் போனதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்தச் சிங்கம் லயன் சஃபாரி பகுதியில் இருந்து மாயமானது குறித்து மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தற்போது முழு வீச்சில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

வண்டலூர் பூங்காவில், 5 நாட்களாக 'ஷெரூ' என்ற ஆண் சிங்கம் காணாமல் போனதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்தச் சிங்கம் லயன் சஃபாரி பகுதியில் இருந்து மாயமானது குறித்து மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தற்போது முழு வீச்சில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Vandalur zoo lion

5 நாட்களாக சிங்கம் மாயம்: வண்டலூர் பூங்காவில் பரபரப்பு; ட்ரோன் மூலம் தீவிர தேடுதல் வேட்டை

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், கடந்த 5 நாட்களாக 'ஷெரூ' என்ற ஆண் சிங்கம் காணாமல் போனதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்தச் சிங்கம் லயன் சஃபாரி பகுதியில் இருந்து மாயமானது குறித்து மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தற்போது முழு வீச்சில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

Advertisment

5 வயதுடைய இந்தச் சிங்கம், கடந்த புதன்கிழமை காலை 28 ஹெக்டேர் பரப்பளவுள்ள லயன் சஃபாரி பகுதிக்குள் விடப்பட்டது. ஆனால், வழக்கம்போல் மாலை உணவிற்காக அது தனது அடைப்பிடத்திற்குத் திரும்பவில்லை. ஆரம்பத்தில் ஒருசில நாட்கள் சுற்றிய பிறகு சிங்கம் திரும்பி வந்துவிடும் என்று அதிகாரிகள் அலட்சியமாக இருந்த நிலையில், அதன் தொடர்ச்சியான வருகை இல்லாதது தற்போது பூங்கா நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கத்தைக் கண்டுபிடிக்க, மிருகக்காட்சி சாலை நிர்வாகம் அடர்ந்த சஃபாரி வனப்பகுதியை ட்ரோன்கள் மூலம் ஸ்கேன் செய்து தீவிரத் தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, லயன் சஃபாரி பகுதி பொதுமக்களுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மிருகக்காட்சி சாலையின் மற்ற பகுதிகள் வழக்கம் போல் செயல்படுகின்றன.

ஷெரூ, சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும், சஃபாரி பகுதிக்குத் திரும்பி வர அதற்குப் பல மாதங்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு, பவானா என்ற பெண் சிங்கம் இதேபோல் காணாமல் போய் 3 நாட்களுக்குப் பின் தானாகவே திரும்பி வந்தது. ஷெரூவும் திரும்புவான் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறிய அதிகாரிகள், சஃபாரி பகுதி 15 அடி உயர இரும்புக் கம்பித் தடுப்புகள் மற்றும் இரட்டை அடுக்கு பாதுகாப்புடன் இருப்பதால், சிங்கம் வெளியேறுவது சாத்தியமற்றது என்று உறுதியளித்தனர்.

Advertisment
Advertisements

அதிகாரிகள் உறுதி அளித்தாலும், காணாமல் போன சிங்கம் பற்றிய தகவல் அருகில் உள்ள கொளப்பாக்கம், நெடுங்குன்றம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: