/tamil-ie/media/media_files/uploads/2018/08/mk-alagiri-..jpg)
TN Live Updates : mk Alagiri
தற்போதுள்ள மாவட்ட செயலாளர்கள் பினாமி போல் செயல்படுவதாக, கலைஞரின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட முன்னாள் தி.மு.க துணை செயலாளர், எம்.எல்ராஜின் இல்ல திருமண விழாவில் மு.க.அழகிரி கலந்துக் கொண்டார். எல்ராஜின் மகள் லிபியா-சந்தோஷ் குமார் ஆகியோரது திருமணம் அது.
திருப்பரங்குன்றத்தில் நடந்த அந்த திருமண நிகழ்ச்சியில், அழகிரியின் மனைவி மற்றும் மகனும் கலந்துக் கொண்டனர்.
அப்போது பேசிய அழகிரி, ”படிப்படியாக வளர்ந்தவர் எல்ராஜ். கலைஞர் அனைவரையும் அப்படித்தான் வைத்திருந்தார். ஆனால் இப்போது தி.மு.க-வில் மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்கும் பினாமிகளாக உள்ளனர்.
வெளியில் உள்ளவர்கள் தான் அவர்களை கட்டுப்படுத்துகிறார்கள்” என்று விமர்சித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.