பொன்முடியுடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு

3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியை மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். நேற்று முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் பொன்முடி.

3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியை மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். நேற்று முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் பொன்முடி.

author-image
WebDesk
New Update
 MK Alagiri sudden meeting with Ponmudi Tamil News

முன்னாள் அமைச்சர் பொன்முடியை அவரது சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் முன்னாள் எம்.பி. மு.க.அழகிரி இன்று சந்தித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ponmudi | mk-alagiri: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது. அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

இந்த தீர்ப்பை தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதேவேளை, இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டபோதும் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வழக்கு தொடர்பான மேல்முறையீடு உள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியை அவரது சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் முன்னாள் எம்.பி. மு.க.அழகிரி இன்று சந்தித்தார். இருவரும் சுமார் அரைமணி நேரம் சந்தித்து பேசினர். சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடியை, மு.க. அழகிரி சந்தித்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ponmudi Mk Alagiri

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: