/tamil-ie/media/media_files/uploads/2023/07/stalin-eps-1.jpg)
நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது தி.மு.க-தான்; அ.தி.மு.க-வைத் தாக்கிய ஸ்டாலின்
தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க தலைவர் நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு பிறந்தநாளை தி.மு.க-வினர்தான் கொண்டாடினார்கள் என்று கூறி அ.தி.மு.க-வைச் சாடியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் தி.மு.க-வினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், திராவிட இயக்கத் தலைவர் சி.என். அண்ணாவின் பெயரையும் படத்தையும் ஒரு அரசியல் கட்சி பயன்படுத்தியது. ஆனால், அவருடைய கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறர்கள் என்று சாடினார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க-வினர் சரியாகக் கொண்டாடவில்லை என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்தார். கடந்த காலங்களில் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அ.தி.மு.க நிறுவனர் நினைவாக கட்டப்பட்ட கட்டிடங்களை சுட்டிக்காட்டினார்.
“தி.மு.க. மூத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனின் பிறந்தநாளை கொண்டாடியது. நாவலர் சிலையை நிறுவியதே தி.மு.க அரசுதான்” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
ஜூலை 15-ம் தேதி மதுரையில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவுக்கு தி.மு,க தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க-வினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.