Advertisment

என்னை கைது செய்த தமிழச்சி தங்கபாண்டியன் கணவர்… ஸ்டாலின் கூறிய ஃப்ளாஷ்பேக்!

அதிமுக ஆட்சியில் தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர் தன்னை கைது செய்தது குறித்து திருமண நிகழ்வில் மு.க ஸ்டாலின் பேசினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
என்னை கைது செய்த தமிழச்சி தங்கபாண்டியன் கணவர்… ஸ்டாலின் கூறிய ஃப்ளாஷ்பேக்!

சென்னையில் இன்று காலை திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும், திமுக பிரமுகர் டாக்டர் மகேந்திரனின் மகன் டாக்டர் கீர்த்தனுக்கும் திருமணம் நடைபெற்றது.

Advertisment

திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதல்வர் ஸ்டாலின், விழாவின்போது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். திமுகவில் இளைஞரணி என்று புதிய அணியை உருவாக்குவது குறித்தும், அதற்கு யாரை பொறுப்பாளராக நியமிக்கலாம் என்பது குறித்தும் அப்போதைய மாவட்டச் செயலாளர்களிடம் எனது தந்தை கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அப்போது, திமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியன்.

தொடர்ந்து, 2007 இல் நெல்லையில் திமுக இளைஞரணி மாநாட்டின் போது மாநாடு கொடியை ஏற்ற யாரை அழைக்கலாம் என தந்தை கருணாநிதியிடம் கேட்ட போது, அவர் தங்கபாண்டியன் மகள் சுமதியை அழைக்க சொன்னார். சுமதியும் எவ்வித சங்கடமும் இன்றி கோடி ஏற்றி வைக்க வருகை தந்தார்.

சுமதி என்ற பெயரை தமிழச்சி என கருணாநிதி தான் மாற்றியதாகவும், அந்த பெயரில் தான் இளைஞரணி மாநாட்டு விளம்பரத்தை கொடுக்குமாறும் என்னிடம் கேட்டுக்கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் 2001-2006 அதிமுக ஆட்சிக்காலத்தில், நாமக்கல் மாவட்டத்தில் திமுக கொடியேற்ற ஏற்ற நான் சென்ற போது, அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி கொடியேற்றி வைத்ததற்ககாக தன்னை கைது செய்தவர் தான் தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர் சந்திரசேகர் என்கிற தகவலை பகிர்ந்தார்.

இந்த திருமண விழாவில் ப.சிதம்பரம், சுப்ரியா சுலே, முத்தரசன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment