New Update
/indian-express-tamil/media/media_files/WxM4JADQict8vSU5JszL.jpg)
மு.க. ஸ்டாலின் திருச்சி வருவதால் ட்ரோன்கள் பறக்க தடை - ஆட்சியர் உத்தரவு
முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு வருவதால், ட்ரோன்கள், ஆள் இல்லா வான் வழி வாகனங்களை பறக்கவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் திருச்சி வருவதால் ட்ரோன்கள் பறக்க தடை - ஆட்சியர் உத்தரவு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக நாளை காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வருகின்றார். பின்னர், சாலை மார்க்கமாக தஞ்சை செல்கின்றார்.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் மாலை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சாலை மார்க்கமாக மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தருகின்றார்.
இந்தநிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவிக்கையில்; முதல்வர் நாளை திருச்சி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலைய பகுதிகள் மற்றும் திருச்சி-தஞ்சை சாலைகளில் பாதுகாப்பு நலன் கருதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகின்றது. ட்ரோன்கள் மற்றும் ஆள் இல்லா வான் வழி வாகனங்களை மேற்கண்ட பகுதிகளில் பறக்கவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.
திருச்சி முதல்வர் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்க திமுக நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
முதல்வர் வருகையால் திருச்சி-தஞ்சை சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளம் மேடுகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.