‘டாலர் சிட்டி’ திருப்பூர் தவிக்கிறது; தீர்வுகண்டு, ‘விஷ்வகுரு’ பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்’ - ஸ்டாலின் வலியுறுத்தல்

“அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, ‘விஷ்வகுரு’ எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்” என்று பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, ‘விஷ்வகுரு’ எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்” என்று பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Stalin Modi 2

“குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.

“பிரதமர் மோடி ஆதரித்த டிரம்ப் விதித்துள்ள வரி காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் ‘டாலர் சிட்டி’ திருப்பூர் தவிக்கிறது.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், “குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.

“அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, ‘விஷ்வகுரு’ எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்” என்று பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்து இந்திய ஏற்றுமதியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகிறது இந்தியா என குற்றம்சாட்டி, இந்திய பொருட்களுக்கான அமெரிக்க இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகரித்துள்ளார்.

Advertisment
Advertisements

இதே போல, அமெரிக்கா பல நாடுகளுக்கு வரி விதித்து வருகிற நிலையில், வரி விதிப்பிற்கு உள்ளாகும் பிற நாடுகள் பதிலுக்கு அமெரிக்கா மீது வரி விதிப்பை அதிகரித்துள்ளன. ஆனால், இந்தியா மட்டும் வரியை குறைக்க முற்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பருத்திக்கு விதிக்கப்படும் வரிக்கு விலக்களிக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டின் திருப்பூரில் தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி!

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே!

தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் விதித்துள்ள வரி காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் ‘டாலர் சிட்டி’ திருப்பூர் தவிக்கிறது.

குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?

நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவன செய்யுங்கள்! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, ‘விஷ்வகுரு’ எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி!” என பதிவிட்டுள்ளார்.

Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: