/indian-express-tamil/media/media_files/E7JY9ICNNn0DVEslYhp3.jpg)
Mk Stalin German England foreign tour Tamil Nadu investment industrial growth
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் முதல்வர் மு.க. ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்கும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வருகிற ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 10 வரை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதுதான். இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் உள்ள முன்னணி தொழிலதிபர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அவர்களுக்கு அழைப்பு விடுக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் மூலம், மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதுடன், அதன் வாயிலாக உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதுமே முக்கிய இலக்காகும். இந்தச் சந்திப்புகளின் விளைவாக, தமிழ்நாட்டிற்குப் பெரும் பயன் அளிக்கும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சருடன், தலைமைச் செயலர் முருகானந்தம், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகள் இந்தப் பயணத்தில் உடன் செல்கின்றனர்.
முந்தைய பயணங்களின் வெற்றி
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே மாதம் முதல், முதல்வர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு முன்பு அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணங்களின் விளைவாக, இதுவரை சுமார் ரூ.18,498 கோடி மதிப்பிலான தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.