/tamil-ie/media/media_files/uploads/2018/09/d267.jpg)
பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை சிம்சன் அருகே அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது தந்தை பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், பேராசிரியர் க.அன்பழகனும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தந்தை பெரியார் அவர்களின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.#HBDPeriyar140pic.twitter.com/82TMKJXskk
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) September 17, 2018
அதனைத் தொடர்ந்து திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதன் காரணமாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
விடுதலை சிறுத்தைக் கட்சியினர் சார்பிலும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.