/indian-express-tamil/media/media_files/4eb6l6IMBC3K4OFupdeK.jpg)
திங்கள்கிழமை (டிச.18) காலை நடக்கும் இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
coimbatore | mk-stalin | கோவையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை (டிச.18) காலை முதல்வர் மு.க ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வருகிறார்.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி அரங்கத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
இந்த விழாவை தொடர்ந்து கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரத்தில் முதற்கட்டமாக 133.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 10ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
இதனிடையே முதல்வர் கோவை வருகையையொட்டி கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் பகுதிகள் வரை சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு வருகின்றனர்.
முதல்வர் விழா முடிந்து கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.பின்னர் மதியம் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.