scorecardresearch

இயற்கை வேளாண்மை கொள்கை வெளியிட்ட ஸ்டாலின்; பாரம்பரிய விதைகளை பாதுகாக்க மரபணு வங்கி

தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை 2023 மண் ஆரோக்கியம், வேளாண் சூழலியல் மற்றும் பல்லுயிர் தன்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவை வழங்க முயற்சி செய்கிறது.

MK
MK Stalin

தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை 2023 மண் ஆரோக்கியம், வேளாண் சூழலியல் மற்றும் பல்லுயிர் தன்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவை வழங்க முயற்சி செய்கிறது.

தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட முதல் நகலை மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

வேளாண் விளைபொருட்களுக்கு தமிழ்நாடு இயற்கை வேளாணமை சான்றிதழ் துறை (TNOCD) வழங்கும் அங்கீகாரம், இப்போது கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு , மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு மற்றும் பாலி கிரீன்ஹவுஸ் உற்பத்திக்கும் விரிவுபடுத்தப்படும். சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தமிழ்நாடு இயற்கை வேளாண்மைக் கொள்கை 2023, சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிதாக்க ஒற்றைச் சாளர முறை அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயிர்களின் பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்க மாநில மரபணு வங்கி அமைக்கப்படும். உலகளவில் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணம் இரசாயனங்களின் உரங்கள் என்றும், பூச்சிக்கொல்லி தங்குதல் உணவுச் சங்கிலியில் நுழைந்து மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பல உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறது. சுற்றுச்சூழல்-பாதுகாப்பான உணவு விநியோக முறையின் அவசியத்திற்கு இயற்கை விவசாயக் கொள்கையை உருவாக்குவது அவசியமானது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

“தமிழகத்தில் ரசாயனமற்ற இயற்கை விவசாயத்தை உறுதி செய்யவும், மேம்படுத்தவும், ஆதரிக்கவும், மக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்கவும் இயற்கை வேளாண்மைக் கொள்கை உதவும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மைக் கொள்கையானது மண் ஆரோக்கியம், வேளாண் சூழலியல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை விவசாய முறைகளை விரிவுபடுத்துவதுடன், பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவை வழங்க விரும்புகிறது.

இயற்கை விவசாய சான்றிதழ் அளிக்கும் முறைகள் மற்றும் இயற்கை விவசாயப் பொருட்களுக்கான சோதனை நெறிமுறைகளை வலுப்படுத்துவதையும், ‘பண்ணையில்’ அல்லது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இடுபொருட்களான பண்ணை உரம், மண்புழு உரம் போன்றவற்றை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சந்தை ஆலோசனைகள், சான்றிதழ் ஆலோசனைகளை உருவாக்குதல், ஏற்றுமதியை ஊக்குவித்தல், விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இயற்கை விவசாயம் ஆகியவை இயற்கை வேளாண்மைக் கொள்கையின் நோக்கங்களாகும்.

நாட்டில் 31,629 ஹெக்டேர் இயற்கை விவசாய நிலத்துடன் தமிழ்நாடு 14வது இடத்தில் உள்ளது. இதில் 14,086 ஹெக்டேர் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது என்று சான்றளிக்கப்பட்ட பகுதி. 17,542 ஹெக்டேர் இயற்கை விவசாயம் செய்யப்படும் நிலங்களாக மாற்றப்படுகிறது. மொத்த பரப்பளவில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முதல், இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. தமிழ்நாடு 4,223 மெட்ரிக் டன் இயற்கை விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் 2020-21 ஆம் ஆண்டில் ரூ.108 கோடியை ஈட்டியது.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கொள்கையின் முதல் பிரதியை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து பெற்றுக்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ.இறை அன்பு மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin releases organic farming policy 2023 gene bank for preservation of traditional seeds