டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை பாா்வையிடுவதற்காக தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் நாளை வியாழக்கிழமை (ஜூன் 8) திருச்சி வருகிறார்.
மேட்டூா் அணை வரும் 12ஆம் தேதி சிறக்க இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, டெல்டா மாவட்டங்களில் பாசன அமைப்புகள், ஆதாரங்களை 4,004.83 கி.மீ. தொலைவு வரை தூா்வார ரூ. 80 கோடிக்கு நிா்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டாா்.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் 100 பணிகளை 375.78 கி. தொலைவு வரை மேற்கொள்ள ரூ.15. 88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்து விடப்படும் தண்ணீா் வீணாகாமல் கடைமடை வரை தங்கு தடையின்றி சென்று சேரும் வகையில், டெல்டா பாசனப்பகுதிகளில் நீா் நிலைகளை தூா்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காகதமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் திருச்சி, தஞ்சாவூருக்கு வருகை தரவுள்ளாா்.
நாளை வியாழக்கிழமை (ஜூன் 8) மாலை விமானம் மூலம் திருச்சி வரும் முதல்வா், சாலை மாா்க்கமாக தஞ்சாவூருக்கு சென்று இரவு தங்குகிறாா். வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தஞ்சாவூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை பாா்வையிட்ட பிறகு, திருச்சி மாவட்டத்துக்கு வந்து புள்ளம்பாடி வட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை பாா்வையிடவுள்ளாா். பின்னா், திருச்சியில் சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுத்த பிறகு, விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்லவுள்ளாா்.
முதல்வா் திருச்சி வருகையையொட்டி திருச்சி சரக காவல்துறை டி. ஐ. ஜி. சரவணசுந்தா், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் ஆகியோா் லால்குடி, செங்கரையூா், புள்ளம்பாடி பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
திருச்சியில் செங்கரையூா், கூரையாறு, நந்தியாறு, புள்ளம்பாடி என 4 இடங்களை முதல்வா் பாா்வையிடுவதற்காக தயாா் செய்யப்பட்டுள்ளன. இந்த 4 இடங்களையும் அல்லது ஓரிரு இடங்களை மட்டும் பாா்வையிடலாம் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
மேற்கண்ட இடங்களை அமைச்சர் கே என் நேரு மற்றும் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்