Advertisment

இந்த முறை பம்பரம் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க உறுதி: அதே 2 தொகுதி கேட்கும் இந்திய கம்யூ.!

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான 3ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான 3ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

Advertisment

 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுப்பராயன் எம்.பி. பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது: ” தமிழகத்திற்கும் பா.ஜ.க காலூன்ற வாய்ப்புகள் இல்லை என்று நிரூபிப்பதற்கான தேர்தல்தான் 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் ஆகும். பொய் மற்றும் தன்னிடம் உள்ள எல்லா அஸ்திரங்களையும் பா.ஜ.க பயன்படுத்தி வருகிறது. இவற்றுக்கு தீர்வு அளிப்பதற்கு சாரதியாக நின்று இருப்பது திராட முன்னேற்றக்கழகம். தி.மு.க தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியால், பாஜக, அதன் ஆதரவு கட்சிகள் தோல்வியடையும்.

நிறைவாக 3ம் கட்டமாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். நிறைவான கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், முதல்வரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிந்தவுடன், எல்லாம் நல்லபடி நடக்கும். எங்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது,. மனரீதியான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 2 நாட்களில் தொகுதி ஒதுக்கீடு தெரிந்துவிடும். ஏற்கனவே வென்ற தொகுதிகள் இரண்டையும் கேட்டிருக்கிறோம்’ என்று அவர் கூறினார்.  

“ இரண்டு மக்களவை, ஒரு மாநிலங்களவை என நாங்கள் கேட்டிருந்தோம். இப்போது ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை என்று கேட்கிறோம். அதுவும் எங்கள் கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தத்தை எப்போதும் ஏற்க மாட்டோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்று தெரியவில்லை” என்று ம.தி.மு.க அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் ஆலோசனைக்கு பின்பு தெரிவித்துள்ளார்.  

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment