"திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்" - ம.நீ.ம முன்னாள் நிர்வாகி அறிவிப்பு

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வரும் 2026-ஆம் ஆண்டு தேர்தலின் போது மீண்டும் போட்டியிடுவேன் என முன்னாள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வரும் 2026-ஆம் ஆண்டு தேர்தலின் போது மீண்டும் போட்டியிடுவேன் என முன்னாள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Muruganandham


திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவேன் என முன்னாள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகியான முருகானந்தம் தெரிவித்துள்ளார். 

Advertisment

கடந்த 2021-ஆம் ஆண்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர் முருகானந்தம் . இவர், திருவெறும்பூர் அருகே கணேசபுரம் பகுதியில் உள்ள எக்ஸெல் குழுமத்தின் சேர்மனாக இருந்து வருகிறார்.

கடந்த காலங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றிய இவர், திருவெறும்பூர் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் களத்தில் இவரது அணுகுமுறை பெரிதாக பேசப்பட்டது. இதையடுத்து, இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி விட்டார்.

இந்நிலையில், திருவெறும்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் தான் போட்டியிடப்போவதாக அவர் தெரிவித்தார். அதன்பேரில், அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே இத்தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment
Advertisements

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Election Mnm

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: