இனி கையில் பணம் வேண்டாம்... தமிழக ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம்: சூப்பர்... முக்கிய பிரச்னைக்கு தீர்வு!

நியாயவிலைக் கடைகளில் பயனாளர்களின் வசதிக்கேற்ப புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நியாயவிலைக் கடைகளில் பயனாளர்களின் வசதிக்கேற்ப புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
ration

இனி கையில் பணம் வேண்டாம்... தமிழக ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம்: சூப்பர்... முக்கிய பிரச்னைக்கு தீர்வு!

தற்போது உள்ள காலத்தில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. மக்கள் பலரும் ’போன் பே’ (Phone pe),  'ஜி பே’ (Gpay) மூலம் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். பெட்டி கடைகள் முதல் பெரும் மால்கள் வரை இந்த வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisment

ஆனால், நியாயவிலைக் கடைகளில் பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் ஆப்கள் (APP) இதுவரை பயன்பாட்டில் இல்லை. தமிழ் நாட்டில் 34,776 ரேஷன் கடைகள் உள்ளன. இவை தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC), கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் போன்ற அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன. 

இந்த கடைகள் 2.25 கோடி ரேஷன் அட்டைகளுக்கு சேவை வழங்குகின்றன. நியாவிலைக் கடைகளில் பச்சை அரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய், துவரம் பருப்பு பொருட்கள் வழங்கும் போது ஸ்மார்ட் கார்டு ஸ்கேன் மூலம் கணக்கீடு செய்யப்படுகிறது. 

ஆனால் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற சில பொருட்களுக்கு ரொக்கமாக பணம் பெறப்படும், இதனால் சில நேரங்களில் கடைகளில் சில்லரை பிரச்சனை ஏற்படுகிறது.  இந்நிலையில், இந்த பிரச்சனைகள் ஏற்படாத வகையில் "மொபைல் முத்தம்மா" (Mobile Muthamma) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

இந்த திட்டத்தின் மூலம் பயனாளர்கள், நியாயவிலைக் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை QR கோடு மூலம் ஸ்கேன் செய்து UPI மூலம் செலுத்தலாம். இந்த திட்டம்  மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் நேரடியாக அரசுக்கு சென்றடைகின்றனர். இதனால் முறைகேடுகள் தடுக்கப்படும்.

இந்த திட்டமானது முதலில் சென்னையில் உள்ள சில கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும்  10 நியாயவிலைக் கடைக்களில் ‘மொபைல் முத்தம்மா’ திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. தொடர்ந்து, பயனாளர்கள் வசதிக்கேற்ப  பேடிஎம், யுபிஐ போன்ற டிஜிட்டல் சேவைகள் அனைத்து கடைகளிலும் கொண்டுவரப்படும். ஒவ்வொரு கடைக்கும் தனி QR கோடு வழங்கப்படும். 

பணபரிவர்த்தனைகளுக்கான பயிற்சிகள் அரசு சார்பில் வழங்கப்படும். மேலும், மத்திய கூட்டுறவு வங்கியின் உதவியுடன் UPI சேவைகள் மூலம் பணப் பரிவர்த்தனைகள் எளிமையாக நடைபெறும் என்று தமிழ்நாடு அறிவித்துள்ளது.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: