/indian-express-tamil/media/media_files/1-valparai-tourists.jpg)
வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார எஸ்டேட் பகுதியில் மழை பொழிவு இருந்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இங்கு சுற்றுலா பயணிகள் வருகை கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது.
வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார எஸ்டேட் பகுதியில் மழை பொழிவு இருந்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் இப்பகுதிகுக்கு தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்கலான கேரளா கர்நாடகா, ஆந்திர புதுச்சேரி மற்றும் பல மாநிலங்கலிருந்தும் வந்து இயற்க்கை அழகை ரசித்து வருகின்றனர்.
ஆற்றுபகுதிகள் காட்சி முனை பகுதியில் மற்றும் ஆங்காங்கே நின்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
இதனால் பொள்ளாச்சி வால்பாறை சாலை போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
இயற்க்கை எழில் கொஞ்சும் வால்பாறை பகுதியை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிகரித்திருப்பது சுற்றுலாபயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.