மக்களே உஷார்; 22ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வரும் 22-ஆம் தேதி வரை குறிப்பிட்ட சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 22-ஆம் தேதி வரை குறிப்பிட்ட சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Heavy rainfall

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக, சில பகுதிகளில் 100 டிகிரியை கடந்து வெயில் பதிவாகி இருக்கிறது. இதனால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

Advertisment

இந்த சூழலில், சில பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் வரும் 22-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது

அதில், "இன்று (மார்ச் 16) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இது தவிர மார்ச் 17 முதல் 22-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், இன்று (மார்ச் 16) முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி அதிகமாக இருக்கக் கூடும். சென்னையை பொறுத்தவரை இன்று (மார்ச் 16) மற்றும் நாளை (மார்ச் 17) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain India Meteorological Department

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: