இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு, 5 அடிக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. 15,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழத்திற்கு இன்று வரும் பிரதமர் மோடி செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள புதிய மின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் நடைபெறும் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மோடி வருகையையொட்டி சென்னையில் நேற்று முழுவதும் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை விமானநிலையம் மற்றும் மற்ற இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள சாலைகளில் வாகனங்கள் செல்வது குறைக்கப்படும். மதியம் 12 முதல் இரவு 8 மணிவரை இந்த சாலைகளில் வாகனம் செல்லாமல் பார்த்துகொள்ளப்படும்.
இந்நிலையில் அண்ணா சாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜி.எஸ்.டி சாலை, மவுண்ட்-பூந்தமல்லி சாலை, 100 அடி சாலை, சி.ஐ.பி.டி ஜங்ஷன் உள்ளிட்ட இடங்களில் வாகன நெசிசல் அதிகமாக இருக்கும்.
மதியம் 12 முதல் இரவு 8 மணிவரை பின்வரும் சாலைகளின் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய கைலாஷ் முதல் ஹல்தா ஜங்ஷன் வரை, இந்திராகாந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திபாரா வரை, மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமபுரத்தில் இருந்து கத்திபாரா வரை, அசோக்பில்லரில் இருந்து கத்திபாரா வரை, விஜயநகர் சந்திப்பில் இருந்து கான்கோர்டு சந்திப்பு கிண்டி வரை, அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் வரை, தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“