கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகி யாரும் வர வேண்டும் என்று பா.ஜ.கவின் டெல்லி தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாஜக கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர். எல். முருகன், அண்ணாமலை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக கன்னியாகுமரி விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று கட்சியினர் இதை ரத்து செய்துள்ளனர். பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக் கூடாது. கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க-வினருக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.