Advertisment

”உங்கள் கடமை உணர்வு மாநிலத்தை மேலும் உயரத்திற்கு இட்டுச்செல்லும்”: தமிழிசைக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழிசைக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

தமிழிசைக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்

Advertisment

புதுச்சேரி துணை நிலை தமிழிசை சௌந்தரராஜனுக்கு இன்று பிறந்த நாள். பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார்.

பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில்,பிறந்த நாள் என்பது மனித சமுதாயத்திற்கும், தேசிய விழுமியங்களுக்கும் அர்ப்பணித்துக் கொள்வதை மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு சிறப்பான சந்தர்ப்பம். இந்த விழுமியங்களை ஒன்றுபடுத்த சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை சமாளித்து நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.கவர்னராக உங்களது அரசியல் சாசனக் கடமைகளை ஆற்றும் செயல்திறனும், கடமை உணர்வும், மாநிலத்தை மேலும் உயரத்திற்கு இட்டுச்செல்லும். சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளை வழங்கவும், தேச சேவையில் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment