Advertisment

சீனாவாக உருமாறிய சென்னை; அதிபர் ஜி ஜின்பிங்-க்கு உற்சாக வரவேற்பு (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi xi summit in mamallapuram xi jinping in chennai - சீனாவான சென்னை; அதிபர் ஜி ஜின்பிங்-க்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

modi xi summit in mamallapuram xi jinping in chennai - சீனாவான சென்னை; அதிபர் ஜி ஜின்பிங்-க்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

Modi-Xi Jinping Summit : சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு இன்று நடைபெறுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி சென்னை நகரில் மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறுவிதமான சிறப்பு ஏற்பாடுகளையும், தீவிரக் கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்துள்ளனர்.

Advertisment

மோடி – சீன அதிபர் சந்திப்பு குறித்த லைவ் அப்டேட்ஸ் செய்திக்கு இங்கே க்ளிக் செய்யவும்

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து இன்று காலை தனி சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர் நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார்.

11, 2019

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சீன அதிபரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றனர்.

அதன் பிறகு விமான நிலைய பகுதியில் நடந்த கண்கவர் கலை நிகழ்ச்சியை சீன அதிபர் பார்வையிட்டார். சுமார் 10 நிமிடங்கள் சீன அதிபர் அங்கு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார்.

11, 2019

பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.சி.டி. கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.

இன்று மாலை 4 மணிக்கு கிராண்ட் சோழா ஹோட்டலில் இருந்து புறப்படும் சீன அதிபருக்கு வழிநெடுக 34 இடங்களில் மேளதாளங்கள், ஆட்டம் பாட்டங்களுடன் கோலாகல வரவேற்புகள் அளிக்கப்படுகிறது. மாலை 5 மணி அளவில் அவர் மாமல்லபுரம் சென்று சேர்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.

அதன் பிறகு பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் உள்ள ஏழாம் நூற்றாண்டு பல்லவர் காலத்து சிற்பங்களை, கோவில்களை பார்வையிட உள்ளனர். சீன அதிபரை பிரதமர் மோடி 3 இடங்களுக்கு அழைத்து செல்ல உள்ளார்.

முதலில் அவர்கள் பல்லவ மன்னர்களின் கைவண்ணத்தில் உருவான உலக புகழ்பெற்ற அர்ஜுனன் தபசு காட்சியை காண உள்ளனர். இதற்காக அந்த பகுதி சிற்பங்கள் சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென்று மாற்றப்பட்டுள்ளன. அங்கு சிறிது நேரம் இருக்கும் அவர்கள் பிறகு ஐந்து ரதம் பகுதிக்கு வருவார்கள்.

ஐந்து ரதம் பகுதியில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சிற்பங்களை மோடியும், சீன அதிபரும் பார்வையிடுவார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் கடற்கரை கோவிலுக்கு புறப்பட்டு செல்வார்கள்.

கடற்கரை கோவில் பகுதியில் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலாசேத்திரா நடன பள்ளி மாணவிகள், தென்னக பண்பாட்டு மையம் கலை குழுக்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை மோடியும், சீன அதிபரும் கண்டு ரசிக்க உள்ளனர்.

இதற்கிடையே இரு நாட்டு தலைவர்களும் தங்களது நாடுகளின் கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் குறித்து விவாதிக்க உள்ளனர். சிறிது நேரம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்பு உள்ளது. சீன அதிபர் மாலை 5 மணிக்கு மாமல்லபுரம் சென்று சேருவதை பொறுத்து கடற்கரை கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத கண்ணாடி அரங்கில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடற்கரை கோவில் பகுதியில் மாலை 6 மணிக்கு தொடங்கும் கலை நிகழ்ச்சிகள் சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும். 6.45 மணி முதல் கடற்கரை கோவில் பகுதியில் இரவு விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இரவு 8 மணி வரை சீன அதிபருக்கு பல்வேறு வகை உணவுகளுடன் விருந்து வைக்கப்படும்.

இரவு விருந்து முடிந்த பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னைக்கு புறப்படுவார். இரவு 9 மணி அளவில் அவர் சென்னை கிண்டியில் உள்ள சோழா நட்சத்திர ஓட்டலுக்கு வந்து சேருவார். இன்று இரவு அங்கு அவர் தங்கி ஓய்வு எடுப்பார்.

 

Xi Jinping
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment