திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்

மூக்குப்பொடியை அதிகம் பயன்படுத்துவதால் பக்தர்களால் 'மூக்குப் பொடி சித்தர்' என அழைக்கப்பட்டு வந்தார்

மூக்குப்பொடியை அதிகம் பயன்படுத்துவதால் பக்தர்களால் 'மூக்குப் பொடி சித்தர்' என அழைக்கப்பட்டு வந்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்

திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்

டிடிவி தினகரனின் ஆஸ்தான் குருவான மூக்குப் பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90-க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisment

மூக்குப்பொடி சித்தரின் உண்மையான பெயர் மொட்டையக்கவுண்டர். சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம். இவர் மூக்குப்பொடியை அதிகம் பயன்படுத்துவதால் பக்தர்களால் 'மூக்குப் பொடி சித்தர்' என அழைக்கப்பட்டு வந்தார்.

இவரை டிடிவி தினகரன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் அவ்வப்போது தரிசனம் செய்து வந்தனர்.

publive-image

Advertisment
Advertisements

சித்தர் கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்ரி ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில், அவர் தங்கியிருந்த சேஷாத்ரி கிரிவலப் பாதையிலேயே இன்று அதிகாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

டிடிவி தினகரன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பலருக்கு ஆன்மீக குருவாக இருந்து வந்த மூக்குபொடி சித்தரின் மறைவு அவரின் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Ttv Dhinakaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: