ஆன்மீகத்தை விட்டு விலகுகிறாரா மஹாவிஷ்ணு? பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது என அறிவிப்பு!
பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது, அறக்கட்டளை வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று அந்த அறக்கட்டையின் நிறுவனரும் ஆன்மீக பேச்சாளருமான மஹாவிஷ்ணு அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு என்ன காரணம்? என்று இந்தப் பதிவில் காணலாம்.
பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது, அறக்கட்டளை வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று அந்த அறக்கட்டையின் நிறுவனரும் ஆன்மீக பேச்சாளருமான மஹாவிஷ்ணு அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு என்ன காரணம்? என்று இந்தப் பதிவில் காணலாம்.
ஆன்மீகத்தை விட்டு விலகுகிறாரா மஹாவிஷ்ணு? பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது என அறிவிப்பு!
பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது, அறக்கட்டளை வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று அந்த அறக்கட்டையின் நிறுவனரும் ஆன்மீக பேச்சாளருமான மஹாவிஷ்ணு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ்தளத்தில் அறிக்கை ஒன்றை மஹாவிஷ்ணு பகிர்ந்துள்ளார். அதில், ஆழ்ந்த அமைதியுடனும் தெளிவுடனும், பரம்பொருள் அறக்கட்டளை மூடப்படுவதை நான் அறிவிக்கிறேன். இந்த முடிவு எந்த வெளிப்புறக் காரணத்தினாலும் அல்ல, என்னுடைய சொந்த ஆன்மீகப் பரிணாம வளர்ச்சிக்காகவே எடுக்கப்பட்டது. குணப்படுத்துதல், வளர்ச்சி மற்றும் உருமாற்றத்திற்கான புனித இடமாக இருந்த இந்த அறக்கட்டளை, அதன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது. இப்போது, என் பயணம் வடிவங்கள், கட்டமைப்புகள் மற்றும் அமைப்புகளைக் கடந்து செல்ல வேண்டும் என்று அழைக்கிறது. நான் இனி வெளிப்புற தளங்கள் மூலம் வழிநடத்த தேவையில்லை;,தெய்வீக பிரசன்னம் நேரடியாகவும், உருவமற்றதாகவும், தேவைப்படும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் பாய்கிறது. அறக்கட்டளையின் ஆக்சிஸ் வங்கி கணக்கு எண் 2241 உடன் முடிவடையும் கணக்கிற்கு அன்பளிப்புகளை அனுப்புவதை நிறுத்துமாறு மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அமைப்பைத் தாண்டி, தூய அமைதி மற்றும் தெய்வீக ஆற்றல் நிறைந்த இடத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் (இறைவனின் அருளால்) உங்கள் அனைவரையும் உள்ளிருந்து ஆசீர்வதிக்கிறேன். பரம்பொருளின் சாராம்சம் வடிவத்தால் பிணைக்கப்படவில்லை, ஆனால் தெய்வீகத்தில் நித்தியமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisment
Advertisements
❤️🙏🏼With deep silence and clarity, I announce the closing of the #ParamporulFoundation. This decision stems not from any external cause, but for my own spiritual evolution. The foundation, which has been a sacred space for healing, growth, and transformation, has served its… pic.twitter.com/o1JoTqnsGh
என் வாழ்கையின் இந்த பகுதி அமைதிக்குள் ஒளிந்த ஓர் புனித நடை. உங்கள் அனைவரையும் என் உள்ளத்தின் மௌனத்திலிருந்து ஆசீர்வதிக்கிறேன். நான் ஏற்கனவே உங்கள் உள்ளத்தில் இருக்கிறேன் என்று உருக்கமாக மஹாவிஷ்ணு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அறக்கட்டளை மூடப்படுவது தொடர்பாக தனது யூடியூப் பக்கத்திலும் மஹாவிஷ்ணு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.