/indian-express-tamil/media/media_files/ynhkPSkqqvMJWM7P9ABh.jpg)
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா எம்.பியின் மகள்,காரை மோசமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்த விபத்தில், சென்னை பெசன் நகரில் சாலையோரமாக தூங்கிக்கொண்டிருந்த சூர்யா என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ராஜ்ய சபா எம்.பி பீடா மஸ்தா ரவோ என்பவரின் மகள் மாதுரி என்பவர் சென்னை, பெசன் நகரில் வேகமாக காரை இயக்கியதால், சாலை ஓரமாக உறங்கிக்கொண்டிருந்த சூர்யா என்ற இளைஞர் மீது கார் ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய மாதுரியை சென்னை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவருக்கு பெயில் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடையார் டிராபிக் விசாரணை படையினர் ஐ.பி.சி 304 ஏ பிரிவில் வழக்கை பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு மாதுரி தப்பிச் சென்றுள்ளார். சி.சி.டி.வி காட்சிகளை வைத்தும், ஆம்புலன்ஸ் அழைத்த மாதுரியின் போன் நம்பரை வைத்து காவல்துறையினர் அவரை கண்டுபிடித்துள்ளனர்.
விபத்தில் உயிழிரிந்த இளைஞரின் குடும்பத்தினர், சென்னை, ஜே- 5 சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் ஒன்று திரண்டு நீதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் மாதுரியின் தோழி, விபத்து நடைபெற்றதும், அங்கிருக்கும் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.