அதிமுக பொதுக்குழு; தமிழக அரசும் முடிவு எடுக்கும்: ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்

அதிமுக பொதுக்குழு நடத்துவது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு நடத்துவது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
அதிமுக பொதுக்குழு; தமிழக அரசும் முடிவு எடுக்கும்: ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்

அதிமுக பொதுக்குழு நடத்துவது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை
அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கட்சியில் தற்போது வெடித்துள்ள ஒற்றை தலைமை என்ற விவகாரம் நாளுக்கு
நாள் பெரிதாகிக்கொண்டு போகிறது. இந்த விவரகாரம் தொடர்பாக
ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக தொடர்ந்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்ட பின் செய்தியாளர்களிடன் பேசிய தேனி எம்பி ரவீந்திரநாத், அடிப்படைத் தேவைகள் என்ற நோக்கத்தில் முதலமைச்சரை சந்தித்தேன் இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று கூறினார். திட்டமிட்டபடி
பொதுக்குழு நடைபெறுமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, அதை பொறுத்திருந்து பாருங்கள்
என்று பதிலளித்தார்.  மேலும் தமிழக அரசும் இதுதொடர்பாக முடிவெடுக்கும். நீதிமன்றத்தை நாடி சட்ட வல்லுநர்களும் இது தொடர்பாக முடிவெடுப்பார்கள்
என்று அவர் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: