தவறான சொல்- செந்தில் குமாரைக் கடுமையாகக் கண்டித்த மு.க.ஸ்டாலின்: ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

திமுக எம்.பி. செந்தில்குமார், ஹிந்தி பேசும் கோமூத்திர மாநிலங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. தென் மாநிலங்களில் உங்களால் ஒருபோதும் நுழைய முடியாது என்று பேசி இருந்தார்.

திமுக எம்.பி. செந்தில்குமார், ஹிந்தி பேசும் கோமூத்திர மாநிலங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. தென் மாநிலங்களில் உங்களால் ஒருபோதும் நுழைய முடியாது என்று பேசி இருந்தார்.

author-image
WebDesk
New Update
MP Senthilkumar

MP Senthilkumar

சமீபத்தில் வெளியான 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. அதேநேரம் தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

Advertisment

இந்நிலையில் செவ்வாய் கிழமை(டிச.5) நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் பேசிய திமுக எம்.பி. செந்தில்குமார், ஹிந்தி பேசும் கோமூத்திர மாநிலங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. தென் மாநிலங்களில் உங்களால் ஒருபோதும் நுழைய முடியாது என்று பேசி இருந்தார்.

அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றை செந்தில்குமார் வெளியிட்டார்.

Advertisment
Advertisements

இந்த நிலையில், இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கையில், ’நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றை செந்தில்குமார் வெளியிட்டு உள்ளார்.

செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில், “முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.

எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை,

அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்." என்று சொல்லி இருக்கிறார்.

பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டிய கடமை கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் அனைவரும் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். மேலும், அகில இந்தியப் பிரச்சினைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: