/tamil-ie/media/media_files/uploads/2022/09/1faafbdd-3039-4d66-aab7-0ab9b1cc550f.jpg)
Su venkatesan and Manickam Tagore
மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% முடிந்துவிட்டது என்று ஒரு பொய்யான பரப்புரையை பாஜக தலைவர் நட்டா கூறியது பெரிய அதிர்ச்சியாக உள்ளதாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினர்.
பாஜக ஆட்சி
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 23, 2022
புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் @manickamtagore போனோம்.
கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம். pic.twitter.com/dB8GeMWrzf
இதுகுறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், 'முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா முழு பூசணிக்காய் மறைக்கும் வேலையாய், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலை 95 சதவீத முடிந்துள்ளதாக கூறினார்.
வடிவேல் கிணறை காணவில்லை என்பது போல் நட்டா கட்டிய 95% கட்டிடத்தை காணவில்லை. அதை தேடி கண்டுபிடிக்க வந்தோம்.
தமிழக மக்களை தொடர்ந்து பாஜக ஏமாற்றி வருகிறது. எய்ம்ஸ் பொறுத்தவரையில் பாஜக பொய்யான தகவல் பரப்புகிறது.
உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 23, 2022
அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை.
ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை.
அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம். pic.twitter.com/q5LlgQc4qH
23 எய்மஸ் மருத்துவமனைகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பானிடம் புரிந்துணர்வு செய்து நிதி பெற்று நடத்துகிறது. மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அரசின் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டுகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் 200 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்கிறது. அதிலும் பாதி நிதி ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனம் தான் ஒதுக்கீடு செய்கிறது. பாஜகவினர் மதுரை மக்களுக்கு மல்லிகை பூ சுற்றுகின்றனர். அண்ணாமலை முழு பூசணிக்காயை சோற்றில் மறைகிறார்.
90 % வேலை ஜப்பான் செய்கிறது. இதில் மத்திய அரசு செய்ய வேண்டிய வேலை, மாநில அரசு இடத்தை ஒதுக்கி தருவது மட்டுமே.
இதே போல் மதுரை விமான நிலையத்திற்கு 540 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எனக் கூறுவது மதுரை மக்களை ஏமாற்றுகின்ற செயல் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.