/tamil-ie/media/media_files/uploads/2023/06/alur.jpg)
ஆளுனர் ஆர்.என் ரவி
ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு சாடிஸ்ட் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் காலாவதியான அரசியல் கொள்கை உள்ளிட்ட பல்வேறு வகையான விமர்சனங்களை தமிழக அரசின் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்துள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து, அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார். மேலும் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்ற தமிழக அரசின் முடிவை ஆளுநர் ஏற்கவில்லை.
இந்நிலையில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளது. ஆர்.என்.ரவி ஒரு சாடிஸ் என்றும் அவருக்கு திமுக வரலாறு பற்றி தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
’;ஒருவரை தொடர்ந்து சீண்டி பார்ப்பது மூலமாக சந்தோஷத்தை பெறும் குணம் ஆளுநருக்கு இருக்கிறது. அதுதான் சாடிசம்’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் சமத்துவத்தை உருவாக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்சியில், சனாதன, வர்ணாசிரமக் கொள்கைகளை பரப்பும் வகையில் பேசிகிறார்” என்றும் விமர்சித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.