மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடி மீது தாக்குதல் நடந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை துரைப்பாக்கத்தில் மாணவனை சகமாணவனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்பியை கொன்ற அண்ணன் : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கனகராஜ் மற்றும் வர்ஷினி. கனகராஜ் மற்றும் வர்ஷினி சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டனர். வர்ஷினி வேறொரு சமூகத்தை சேர்ந்தவர். இது கனகராஜின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. இதனிடையே, ரங்கராயர் ஓடை பகுதியில் அவர்கள் சென்றபோது அவர்களை கொடூர ஆயுதங்களால் மர்மகும்பல் ஒன்று தாக்கியது. இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். வர்ஷினி சிகிச்சைக்காக, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். கனகராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணனை கொன்றதாக கனகராஜின் சகோதரர் வினோத்குமார் போலீசில் சரணடைந்தார். அவரிடம் மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சக நண்பனே கொலை : தன் தங்கையை காதலித்த நண்பனை, சக நண்பனே கொன்ற சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் சண்முகம் மற்றும் ஷரவந்த்.. ஷரவந்த், ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவன். சண்முகத்தின் தங்கையை, ஷரவந்த் காதலித்து வந்துள்ளான். இந்த விசயம் கேள்விப்பட்ட சண்முகம், கல்லூரி வளாகத்திலேயே, ஷரவந்தை கத்தியால் குத்தினான். சம்பவ இடத்திலேயே ஷரவந்த் பலியானான்.
அடுத்தடுத்து நடைபெறும் கொலை சம்பவங்கள், மக்களிடையே பெரும்அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.