/indian-express-tamil/media/media_files/2025/05/26/eW2RjfG0cnZwonDiCiHI.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.41 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 03, 2025 21:45 IST
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.ம.மு.க விலகுவதாக டி.டி.வி தினகரன் அறிவிப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (NDA) விலகுவதாக அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். சமீபத்தில் ஓ.பி.எஸ். அணியும் கூட்டணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது டி.டி.வி. தினகரனும் விலகியுள்ளார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்” என்ற்உ அறிவித்துள்ளார்.
- Sep 03, 2025 20:59 IST
பஞ்சாபில் பெய்த பெருமழை வெள்ளத்தில் 37 பேர் உயிரிழப்பு - மாநில அரசு அறிவிப்பு
பஞ்சாபில் கனமழை காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் 23 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநில அரசின் அறிக்கையின்படி, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- Sep 03, 2025 20:42 IST
வில்சன் பவர் நிறுவனத்துடன் ரூ. 300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்து
தமிழ்நாட்டை பசுமை எரிசக்தி உற்பத்தி மையமாக மாற்றும் வகையில், லண்டனில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், வில்சன் பவர் நிறுவனத்துடன் ரூ. 300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலமாக 543 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம், கடல்சார் மேலாண்மை, கப்பல் கண்காணிப்பு மற்றும் ஆய்வு ஆகிய துறைகளுக்காக கையெழுத்திடப்பட்டுள்ளது. முதல்வரின் இங்கிலாந்து பயணத்தில், பல முக்கிய துறைகளில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- Sep 03, 2025 20:38 IST
அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு செல்லாதது ஏன்? - அண்ணாமலை விளக்கம்
அமித்ஷாவை சந்திக்க தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர். இவர்களுடன் அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டு செல்லாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அதிகமான திருமண நிகழ்ச்சிகள், வேலைகள் உள்ளதால் டெல்லி செல்ல இயலவில்லை; டெல்லி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து தலைவர்களிடம் ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Sep 03, 2025 20:20 IST
இங்கிலாந்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
இங்கிலாந்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் அந்த நிறுவனம் ஆர்வம் காட்டியதாகத் தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
- Sep 03, 2025 19:48 IST
திண்டிவனத்தில் எஸ்சி ஊழியரை காலில் விழ வைத்ததாக குற்றச்சாட்டு; சி.பி.எம் செப்.4-ல் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
திண்டிவனத்தில் பட்டியலின ஊழியரை காலில் விழ வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக, சி.பி.எம் செப்.4-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்ட நகர்மன்றத் தலைவரின் கணவர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர் அவரது கணவர் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென சி.பி.எம் மாநிலச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- Sep 03, 2025 18:33 IST
நேருவின் அதிகாரப்பூர்வ இல்லம் ரூ.1,100 கோடிக்கு விற்பனை
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம் ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 3.7 ஏக்கரில் அமைந்துள்ள நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம் விற்பனை செய்யப்பட்டது. ரூ.1400 கோடி நிர்ணயிக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக பேச்சு நடந்த நிலையில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. சொத்து மீது யாராவது உரிமை கோர இருந்தால் 7 நாட்களில் ஆவணங்களுடன் தெரிவிக்குமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேருவின் பங்களா ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி கக்கர் பினா ராணியிடம் உள்ளது. நாட்டின் ரியல் எஸ்டேட் துறையில் வீடு விற்பனையில் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்தது.
- Sep 03, 2025 18:11 IST
8 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 03, 2025 18:10 IST
”ராமதாஸ் விதித்த கெடுவிற்கு நாளை பதிலளிக்கிறேன்”
ராமதாஸ் விதித்த கெடுவிற்கு நாளை பதிலளிக்கிறேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளர். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்புமணி இந்த தகவலை தெரிவித்தார். பாமக நிர்வாகக் குழு இன்று கூடியது. ராமதாஸ் தலைமையில் இன்று குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வரும் 10 ஆம் தேதி வரை காலக்கெடு அளிப்பதாக ராமதாஸ் பேட்டி அளித்திருந்தார்.
- Sep 03, 2025 17:32 IST
சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ பணி
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏர்போர்ட் முதல் கிளாம்பாக்கம் வரை 15.5 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் அமைப்பதற்கான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- Sep 03, 2025 17:25 IST
பராமரிப்புப் பணியால் செப்.5, 7ல் மின்சார ரயில்கள் ரத்து
பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே பராமரிப்புப் பணியால் செப்.5, 7ல் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.25 மணிக்கு சென்னைக்கு வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டது.
- Sep 03, 2025 17:22 IST
டெல்லியில் கூடியது 56வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் செய்வதற்கான பணிகள் நடந்தது. இந்நிலையில் இன்று (செப் 03) காலை 11 மணிக்கு டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
- Sep 03, 2025 17:12 IST
அமெரிக்காவுக்கு எதிராக சதி: சீனா மீது டிரம்ப் பாய்ச்சல்
புதின்-கிம் ஜாங் உன்னுடன் இணைந்து அமெரிக்காவிற்கு எதிராக சீனா சதி செய்வதாக டிரம்ப் சாடியுள்ளார். சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் கலந்து கொண்டதை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது: சீனாவுக்கு வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்க, அமெரிக்கா அளித்த மகத்தான ஆதரவையும் சிந்திய ரத்தத்தையும் சீன அதிபர் ஜின்பிங் குறிப்பிடுவாரா இல்லையா என்பதுதான் பதிலளிக்கப்பட வேண்டிய பெரிய கேள்வி என்று குறிப்பிட்டுள்ளார்.
- Sep 03, 2025 17:07 IST
அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு முடிவு
தமிழ்நாட்டில் 6 அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அமராவதி, ஆழியாறு, பவானிசாகர், மேட்டூர், வைகை அணைகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. சுற்றுலாத்துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
- Sep 03, 2025 16:55 IST
நட்பை ஆவண ஆதாரங்கள் மூலம் எப்படி நிரூபிக்க முடியும்? ஐகோர்ட் கேள்வி
நட்பை ஆவண ஆதாரங்கள் மூலம் எப்படி நிரூபிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், குடும்ப நண்பர்கள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து 4 வாரங்களுக்குள் சட்டப்படி இறுதி முடிவு எடுக்க அங்கீகார குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
- Sep 03, 2025 16:53 IST
ஆளுநர்கள் தடைக்கல்லாக இருப்பதை அனுமதிக்க கூடாது - மேற்குவங்க அரசு வாதம்
மசோதாக்கள் மீதான முடிவின் போது ஆளுநர்கள் விருப்புரிமை அதிகாரத்தை செயல்படுத்த முடியாது. மசோதாவை நிறுத்தி வைத்து அரசியலமைப்பு சாசனம் செயல்பட ஆளுநர்கள் தடைக்கல்லாக இருப்பதை அனுமதிக்க கூடாது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க 3 மாதம் காலக்கெடு இல்லாவிட்டாலும் காலக்கெடு என்பது இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு வாதங்களை முன்வைத்துள்ளது
- Sep 03, 2025 16:31 IST
மற்ற கட்சிகளில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கம் தி.மு.க.,விற்கு இல்லை - அமைச்சர் முத்துசாமி
மற்ற கட்சியிலிருந்து வருபவர்களை தி.மு.க வரவேற்கும், அதே நேரத்தில் மற்ற கட்சிகளில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கம் தி.மு.க.,விற்கு இல்லை என செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அமைச்சர் முத்துசாமி பதில் அளித்துள்ளார்
- Sep 03, 2025 16:23 IST
மின் பகிர்மான கழகத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடங்கள்; விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று முதல் அக்டோபர் 2 வரை விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
- Sep 03, 2025 16:00 IST
ஆலோசனைக்கூட்டம் நிறைவு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான தமிழ்நாடு பாஜக தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் நிறைவு. கூட்டணி கட்சியை மேலும் வலுப்படுத்துவது, சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராவது, உட்கட்சிப் பூசல்களைக் களைவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
- Sep 03, 2025 15:42 IST
தமிழகத்தில் இரு நாட்களுக்கு காய்ச்சல் குறித்த ஆய்வுகள்
தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 3) மற்றும் நாளை (செப்டம்பர் 4) ஆகிய இரு நாட்களுக்கும் காய்ச்சல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, மற்றும் தொண்டை பாதிப்பு போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- Sep 03, 2025 15:41 IST
கச்சத்தீவு இலங்கைக்கு தான் சொந்தமானது: இலங்கை அமைச்சர் விஜய்க்கு பதில்
சென்னை: கச்சத்தீவு இலங்கைக்கு தான் சொந்தமானது. உலகத்திற்கும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். அரசியலுக்காக இதுகுறித்து பேசும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த உண்மையை கூறிக்கொள்ள விரும்புகிறேன் என இலங்கை அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப் தவெக தலைவர் விஜய்க்கு பதில் அளித்துள்ளார்.
- Sep 03, 2025 15:03 IST
மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் , மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி X பக்கத்தில் கண்டனம்சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் , மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) September 3, 2025
மூடப்படாமல் இருந்த மழை நீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும்,… - Sep 03, 2025 14:59 IST
10ஆம் தேதிக்குள் அன்புமணி பதில் அளிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை- ராமதாஸ் பேட்டி
16 குற்றச்சாட்டுகளுக்கு செப்.10ஆம் தேதிக்குள் அன்புமணி பதிலளிக்க வேண்டும் என 2வது முறையாக கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தைலாபுரத்தில் நடந்த பாமக நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பின் நிறுவனர் ராமதாஸ் பேட்டி
- Sep 03, 2025 14:55 IST
7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் செப்.9ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். - Sep 03, 2025 14:52 IST
85 நாட்களுக்குப் பிறகு சொகுசு கார் மீட்பு
சென்னையில் கடந்த ஜூன் மாதம் கடத்தப்பட்ட சொகுசு கார் பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்டது. கார் கொள்ளையன் சத்யேந்திர செகாவத், ஜூன் 6-ல் கைது செய்யப்பட்டார்; ராஜஸ்தான் மாவட்டத்தின் பாகிஸ்தான் எல்லையில் கார் இருப்பதை அறிந்து சென்றபோது, கடத்தல்காரர்கள் வழியில் விட்டுச்சென்றனர்; காரை மீட்ட சென்னை திருமாமங்கலம் காவல்துறையினர் நேற்று இரவு சென்னை திரும்பினர்.
- Sep 03, 2025 14:42 IST
விமர்சனங்களை புறந்தள்ளுகிறேன்: மு.க.ஸ்டாலின் ட்வீட்
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம்! தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் - ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்தப் பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்…
மு.க.ஸ்டாலின் ட்வீட்
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம்!
— M.K.Stalin (@mkstalin) September 3, 2025
தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் - ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன்.
இந்தப் பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்…#LetterToBrethren… pic.twitter.com/PBWGul1PWK - Sep 03, 2025 14:32 IST
மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்
கல்லூரி விடுதியின் சுவரில் ’ஜெய்பீம், சுதந்திர பாலஸ்தீனம்’ என எழுதியதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றிய அரசின் கீழ் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் 2ம் ஆண்டு மாணவர்கள் மூவர், விடுதி சுவர்களில் தேச விரோதமான வாக்கியங்களை எழுதியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிராக மாணவர்கள் மூவரும் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே முறையீடு செய்தனர்.
- Sep 03, 2025 13:47 IST
அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வரும் 10ம் தேதி வரை காலக்கெடு
அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வரும் 10ம் தேதி வரை காலக்கெடு அளிப்பதாக ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். முன்பு விதிக்கப்பட்ட காலக்கெடு கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
- Sep 03, 2025 13:37 IST
அவல ஆட்சி இருந்து என்ன பயன்? - இ.பி.எஸ் கடும் தாக்கு
மழைநீர் வடிகால் பள்ளத்தில் அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க முடியாத அவல ஆட்சி இருந்து என்ன பயன்? மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை; மழைநீரும் வடிந்த பாடில்லை. தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலினின் திமுக அரசு முழு பொறுப்பேற்று உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளோடு மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- Sep 03, 2025 13:30 IST
புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு மாணவர்கள் செப்.22 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பி.எஸ்சி. படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
- Sep 03, 2025 13:10 IST
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி கட்சியுடன் கூட்டணி பேச்சு என்ற தகவலுக்கு தவெக மறுப்பு
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி கட்சியுடன் கூட்டணி பேச்சு என்ற தகவலுக்கு தவெக மறுப்பு தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை; மக்களைக் குழப்பும் நோக்கில் யூகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிட வேண்டாம்; வார இதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளது என்று த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- Sep 03, 2025 13:04 IST
மிலாடி நபி - புதுச்சேரியில் மதுபானக் கடைகளை மூட உத்தரவு
வரும் 5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள், சாராய கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் இயங்கி வரும் மதுபானக் கடைகளை மூட உத்தரவு. “கள், சாராயம், பார் உள்பட அனைத்து வகை மதுக்கடைகளையும் மூட வேண்டும்“ எனறு தெரிவித்துள்ளது.
- Sep 03, 2025 12:54 IST
டெல்லி செல்லாதது ஏன்? - அண்ணாமலை விளக்கம்
அதிகமான திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் இன்று டெல்லி செல்லவில்லை என்று டெல்லியில் நடைபெறும் பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு செல்லாதது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
- Sep 03, 2025 12:37 IST
தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை
தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை வருகிறார். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் கூட்டணியை வலுப்படுத்துவது, தேர்தலுக்கு தயாராகுவது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- Sep 03, 2025 12:29 IST
தவெக புதுச்சேரி பொறுப்பாளர்கள் விரைவில் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி பொறுப்பாளர்கள் விவரங்களை தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பார் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர் விஜய் எடுக்கும் முடிவே இறுதியானது என்று தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- Sep 03, 2025 11:56 IST
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? - சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி
சென்னை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகளை அப்புறப்படுத்தாதது குறித்த வழக்கு தொடரப்பட்ட நிலையில், விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணங்கள் வசூலிக்காதது ஏன்? என்று சென்னை மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி தவறிவிட்டது என்றும் ஆபத்து இல்லாத பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
- Sep 03, 2025 11:54 IST
புதுச்சேரி: ரூ.29,000-க்கு ஏலம் போன அரிய வகை மீன்கள்
புதுச்சேரி ஏனாமில் மீனவரின் வலையில்அரியவகை புல்சா மீன்கள் சிக்கி உள்ளன. அதிக சுவை, சத்து கொண்ட புல்சா மீன்கள், கடலில் இருந்து இனப்பெருக்கத்துக்கு ஆற்றுக்கு வரும்போது சிக்குகிறது. மீனவர் வலையில் பிடிபட்ட புல்சா மீன்கள் அதிக அளவாக ரூ.29,000க்கு ஏலம் போனது.
- Sep 03, 2025 11:37 IST
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழிபெயர்ப்பில் தவறு - டி.என்.பி.எஸ்.சி ஆலோசனை
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழிபெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டிஎன்பிஎஸ்சி ஆலோசனை நடத்துகிறது. தவறுகள் மீதான நடவடிக்கை குறித்தும், எதிர்காலத்தில் தவறை தவிர்ப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது. கேள்விகளில் தவறு ஏற்பட்டால் வழக்கமாக வழங்கப்படும் முழு மதிப்பெண்ணை இந்த முறையும் வழங்கத் திட்டம் என தகவல்கள் கூறுகின்றன.
- Sep 03, 2025 11:11 IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - யுகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் யுகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிராவெய்ட், புயெட்ஸ் இணையை 6-4,6-4 என பாம்ப்ரி, மைகேல் ஜோடி வீழ்த்தியது. கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பிரிவில் இந்திய வீரரான யுகி பாம்ப்ரி, காலிறுதிக்கு தகுதிபெறுவது இதுவே முதல்முறை.
- Sep 03, 2025 11:10 IST
ஆட்டோ ஓட்டுநர் ரகளை
சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மதுபோதையில் அதிவேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரை மடக்கி பிடித்து போக்குவரத்து போலீசார் விசாரித்த நிலையில், 'நடவடிக்கை எடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்' என ஆட்டோ ஓட்டுநர் ரகளையில் ஈடுப்பட்டுள்ளனர்.
- Sep 03, 2025 10:26 IST
"தெருநாய் பிரச்சனைக்கு தீர்வு ரொம்ப சிம்பிள்" - கமல்ஹாசன்
"ஓட்டை காணோம், வாக்காளர் பட்டியலில் பெயரை காணோம் என நானே சொல்லி கொண்டு இருக்கிறேன். வாக்காளர் பட்டியல் தொடர்பாக பெரிய சந்தேகம் எழுந்ததால் புகார் செய்து இருக்கிறோம். தெருநாய் பிரச்சனைக்கு தீர்வு ரொம்ப சிம்பிள், கழுதை எங்கே காணோம் என்று கவலைப்படுகிறார்களா" என்று மாநிலங்களவை எம்.பி கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
- Sep 03, 2025 10:19 IST
பெங்களூரில் இருந்து கொக்கைன் கடத்தல் - ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு விற்பனை செய்தவர் கைது
ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த பிரதீப் கூட்டாளி மேத்யூ கைது செய்யப்பட்டுள்ளார். கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் மேத்யூ கொக்கைனை பல பிரபலங்களுக்கு கொடுத்தது அம்பலமாகியுள்ளது. பெங்களூரில் இருந்து கொக்கைன் கடத்தி வந்து மேத்யூ விற்பனை செய்துள்ளார். மேத்யூ கொடுத்த தகவலின் பேரில் பிரபலங்கள் சிலரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 28-வது நபராக மேத்யூவை சூளைமேடு போலீசார் கைது செய்துள்ளனர்.
- Sep 03, 2025 09:33 IST
சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை - பொது சுகாதாரத்துறை விளக்கம்
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவது சாதாரண இன்புளூயன்சா ஏ காய்ச்சல் மட்டுமே; புதிய வகை வைரஸ் தொற்று எதுவும் இல்லை என பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்புளுயன்சா ஏ வகை பாதிப்பு மட்டுமே உள்ளது. ஆண்டின் இறுதி 3 மாதங்களில் டெங்கு பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான்; வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
- Sep 03, 2025 09:16 IST
மீண்டும் முகக்கவசம்!
தமிழ்நாடு முழுவதும் 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் திருமணம், போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
- Sep 03, 2025 09:16 IST
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா முழுவதும் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 03, 2025 08:59 IST
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னையில் காலியாக உள்ள 20 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் அறிவித்துள்ளார்.
- Sep 03, 2025 08:49 IST
வடிகாலில் விழுந்து பெண் பலி - “இயற்கைக்கு மாறான மரணம்“
சென்னை, சூளைமேட்டில் பெண் மழை நீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபா என்ற பெண் மழை நீர் வடிகாலில் விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்திருப்பது சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
- Sep 03, 2025 08:48 IST
நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்
வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதித்தது வருவாய் நுண்ணறிவு இயக்குனரகம். முன்னதாக இவ்வழக்கைல் ரூ.37 கோடி மதிப்புள்ள ரன்யா ராவின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தன.
- Sep 03, 2025 08:46 IST
நிலச்சரிவில் 1000 பேர் உயிரிழப்பு
சூடானில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் உடலை மீட்க ஐ.நாவின் உதவியை சூடான் நாடியது.
- Sep 03, 2025 08:07 IST
விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி!
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதித்த வீரர் - வீராங்கனையர் 8 பேருக்கு 3% விளையாட்டு இட ஒதுக்கீட்டின்கீழ், தமிழ்நாடு அரசு அரசுப் பணி வழங்கியது. பணி நியமன ஆணைகளை வழங்கி உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.