கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இஸ்லாமிய மாணவி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி சக மாணவ-மாணவியர் முன்னிலையில் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பெற்றோர் கல்வி அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், “மாட்டுக் கறி சாப்பிட்டதால் இப்படி ஆடுகிறாரா? எனக் கூறி காலணிகளை சுத்தம் செய்ய வைத்தனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கல்வி அதிகாரி விசாரணை நடத்தினார். கல்வி அலுவலகத்தில் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மற்றும் வகுப்பு ஆசிரியை அபிநயா ஆகியோர் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய சமூக ஆர்வலர் ஹூசைன், “அரசுப் பள்ளியில் படிக்கும் இக்குழந்தைக்கு இந்தக் கொடுமை கிட்டத்தட்ட 2 மாதங்களாக நடந்துள்ளது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“