Advertisment

மோடி ரோடு ஷோவில் பள்ளிக் குழந்தைகள்; முத்தரசன் குற்றச்சாட்டு

“கோயம்புத்தூரில் பிரதமர் நரேந்திர மோடி சாலை பேரணி நடைபெற்றது; இதில் பள்ளிக் குழந்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளிப்போம்” என இரா. முத்தரசன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Mutharasan said there was no need to make the Karunanidhi pen memorial a controversy

மோடி ரோடு ஷோவில் பள்ளிக் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டனர் என முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

R Mutharasan | Lok Sabha Election | இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் இரா. முத்தரசன் சென்னையில் இன்று (மார்ச் 19, 2024) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “கோயம்புத்தூரில் பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்தியுள்ளார். இதில் எதிர்பார்த்தப்படி பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

Advertisment

இதனால், பள்ளிக் குழந்தைகளை பிடித்து நிறுத்திவைத்துள்ளனர். இது அப்பட்டமான தேர்தல் நடைமுறை விதிமீறல். இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்.

இந்தப் புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்” என்றார். கோயம்புத்தூரில் பிரதமர் மோடி நேற்று ரோடு ஷோ நடத்தினார்.

2024 மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

R Mutharasan Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment