பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தேவரின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள்:
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி மற்றும் 56-வது குருபூஜை விழா கொண்டாட்டம் நேற்று முதல் ஆரம்பமானது. மதுரையில் தேவரின் ஆன்மீக விழாவில், அவரின் நினைவாலய வளாகத்தில் தேவரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அதனை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். தேவர் நினைவாலயத்திற்கு நேற்று முன்தினம் ஏராளமானோர் வந்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் இன்று (30.10.18) பசும்பொன் தேவர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள மதுரை சென்றுள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வர் ஆகியோர், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் மதுரையில் நடக்கவிருக்கும் தேவரின் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள உள்ளனர்.
இதே போல் அமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் , மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். டிடிவி தினகருடன் அமுக கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.