மக்களவை தேர்தலில் 8.19 சதவிகிதம் ஓட்டு பெற்ற நிலையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை நாம் தமிழர் கட்சி பெற்றது. இதுபோல விடுதலை சிறுதைகள் கட்சிக்கு மாநில கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி அரக்கோணம், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 6 தொகுதிகளில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. மற்ற தொகுதிகளில் 4 ம் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8 சதவுகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. இந்நிலையில் 8 % வாக்குகள் பெற்றதால் மாநில கட்சி அங்கீகாரம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
2 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கிகாரம் கிடைத்துள்ளது. வாக்கு சதவிகிதம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இரு கட்சிகளும் வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் இதை 15 முதல் ஒரு மாதத்துக்குள் உறுதி செய்து, மாநில அங்கீகாரம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.