Advertisment

என்.ஐ.ஏ ரெய்டில் சிக்கிய நாம் தமிழர் கட்சி: சாட்டை துரைமுருகன் வீட்டில் இன்று அதிரடி சோதனை

தமிழ்நாடு முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

Advertisment

தமிழகத்தில் 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் சாட்டை துரைமுருகன் வீட்டிலும் ( திருச்சி)  சோதனை நடைபெற்றது. ஆலந்துறை ஆர்.ஜி நகரில்  உள்ள ரஞ்சித் வீடு, ஆலப்பட்டி பகுதிகளில் உள்ள முருகன் ஆகிய வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் 2 இடங்களிலும், தென்காசி , இளையான்குடி பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 2022, ஆண்டு சென்னை வளசரவாகத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சிகள் எடுத்ததாகவும். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதிலும் பதுங்கி இருப்பதாக சந்தேகம் எழுந்து என்.ஐ.ஏ வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகிறது.

இதில் விடுதலை புலிகளுக்கு தொடர்புடைய அன்பரசன் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவர் போதை பொருட்களை விற்று, விடுதலை புலிகள் அமைப்பிற்காக நிதி திரட்டி வருவதை கண்டுபிடித்த காவல்துறையினர், இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரிடம் விசாரித்த போது இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்திற்கு நிதி கிடைப்பதாக தகவல் கிடைத்ததாகவும், இதன் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. காலை 6 மணி முதல்  சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment