நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவருக்கு பெயர் சூட்டும்போது, ” குழந்தை ஆணா, பெண்ணா என சொல்ல மாட்டீங்களா’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட 13 கிராமங்களை உளடக்கிய பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்துவது குறித்து அதிகாரிகள் சென்றபோது, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வருடமாக அப்பகுதி விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே, மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தை நாம் தமிழர் கட்சி நடத்தியது.
இந்நிலையில் அந்த நிகழ்வில் கட்சியின் நிர்வாகியின் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதால். குழந்தைக்கு வெண்ணிலா என்று பெயர் வைத்தார் சீமான். ஆனால் குழந்தை ஆண் என்று எல்லோரும் கூறியபோது, ’பெயர் வைக்கும்போதே ஆணா? பொண்ணா என்று சொல்ல மாட்டீங்களா’ என்று சிரித்திக்கொண்டே சீமான் கேட்டார்.
இந்நிலையில் இதனால் கூட்டத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். பின்னர் குழந்தைக்கு வெற்றி வேந்தன் என்று பெயர் சூட்டப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“