Advertisment

என்னை டார்கெட் பண்றாங்க; பிடிபட்ட ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

என் பெயரைக் களங்கப்படுத்த வேண்டும் என்று இப்படி சிலர் செய்கின்றனர்; தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – நயினார் நாகேந்திரன்

author-image
WebDesk
New Update
 Nainar Nagendran on BJP to participate in TN special assembly meeting  Tamil News

நயினார் நாகேந்திரன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளரும் எம்.எல்.ஏ.,வுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில், சனிக்கிழமை இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பயணிகள் , 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கபட்டது.

அவர்கள், நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள், புரசைவாக்கம் தனியார் விடுதியைச் சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதற்கட்ட விசாரணை முடிவில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, சென்னை கீழ்பாக்கத்தில் பா.ஜ.க வேட்பாளர்  நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். மேலும், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு மத்திய சென்னை தொகுதி பார்வையாளர் சாகுல் ஹமீது நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில், நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லை மேலப்பாளையத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் கணேஷ் என்பவரது வீட்டில் ரூ.2 லட்சம், 100 வேஷ்டி, சேலைகள், மதுபாட்டில்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாராவது புகார் கொடுக்கட்டும். எனக்கு கவலை இல்லை. எனக்கு தொடர்புடைய இடத்தில் பணம் கைப்பற்றப்படவில்லை. அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என் பெயரைக் களங்கப்படுத்த வேண்டும் என்று இப்படி சிலர் செய்கின்றனர். எனக்கு நெருக்கடி கொடுக்க சிலர் என்னை டார்க்கெட் செய்கின்றனர். நான் பிரபலமாக இருப்பதால் இப்படி சிலர் செய்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Nainar Nagendran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment