'டி.டி.வி ஏன் அப்படி சொன்னார் எனத் தெரியவில்லை'... நயினார் நாகேந்திரன் பேட்டி

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தானும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன்தான் காரணம் என்று டி.டி.வி தினகரன் கூறிய குற்றச்சாட்டை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தானும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன்தான் காரணம் என்று டி.டி.வி தினகரன் கூறிய குற்றச்சாட்டை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
nainar nagendran 2

'டி.டி.வி ஏன் அப்படி சொன்னார் எனத் தெரியவில்லை'... நயினார் நாகேந்திரன் பேட்டி

கூட்டணியில் இருந்து வெளியேற நான்தான் காரணம் என எந்த அடிப்படையில் டி.டி.வி தினகரன் கூறுகிறார் என விளங்கவில்லை என பா.ஜ.க. மாநிலத தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டிளித்தார்.

Advertisment

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், பாஜக உடனான கூட்டணி முறிவுக்குத் தானே காரணம் என்று கூறியது குறித்து விளக்கமளித்தார். “டி.டி.வி. தினகரன் 2001 தேர்தல் உட்படப் பல தருணங்களில் முக்கியப் பங்காற்றியவர். என்னைப்போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வர அவரும் ஒரு காரணம். எனக்கு அவருடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

அமித் ஷாவின்  வழிகாட்டுதலின்படிதான் நான் மாநிலத் தலைவராகச் செயல்படுகிறேன். அவர் கூட்டணி முறிவுக்கு நான் காரணம் என்று எந்த அடிப்படையில் கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. கூட்டணியிலிருந்து கட்சிகள் விலகுவதும், தற்போது நடைபெறும் நிகழ்வுகளும் எனக்கும் மனவருத்தம்தான்” என்று நாகேந்திரன் கூறினார்.

அ.தி.மு.க கூட்டணி & தி.மு.க மீதான விமர்சனம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராகத் தான் அறிவிக்கவில்லை என்று நாகேந்திரன் தெளிவுபடுத்தினார். “உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்திற்குப் பிறகுதான் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்தவர்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியில் இருப்பார்கள்” என்று நாகேந்திரன் உறுதிபடக் கூறினார். செங்கோட்டையனை தங்கள் கட்சிக்கு அழைக்கும் திட்டம் இல்லை என்றும், தாங்கள் ஏற்கனவே கூட்டணியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

தி.மு.க. அரசு நியாயமில்லாத, மக்கள் விரோத அரசாங்கமாகச் செயல்படுவதாக நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து அரசு கவனம் செலுத்தாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், “அனைவரும் இணைய வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே நானும் கூறி வருகிறேன். இது குறித்து அனைத்துத் தலைவர்களிடமும் பேசியிருக்கிறேன். ஒரு சிறிய கட்சி, பெரிய கட்சி என்பது முக்கியமல்ல. கூட்டணிதான் முக்கியம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Nellai Nainar Nagendran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: