/indian-express-tamil/media/media_files/2025/04/12/i9wjSEcqZh6hVddqwvZA.jpg)
அ.தி.மு.க. நகர செயலாளர் - பா.ஜ.க. மாநிலத் தலைவர்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்?
பாரதிய ஜனதா கட்சி (BJP) தனது தமிழ்நாடு பிரிவின் தலைவராக நயினார் நாகேந்திரனைத் தேர்ந்தெடுத்துள்ளது. அ.தி.மு.க-விலிருந்து விலகிய நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ.க-வின் 13-வது தலைவராக பொறுப்பேற்க உள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்குப் பிறகு அவர் பதவியேற்க உள்ளார் . இந்தப் பதவிக்கு அவர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்ததால், அவர் மட்டுமே போட்டியாளராக இருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க ஆதிக்கம் செலுத்தும் மாநிலத்தில் பா.ஜ.க. காலூன்ற முயற்சிக்கிறது. மாநில அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய தேர்தல்களில் கட்சியை வழிநடத்துவது நயினார் நாகேந்திரனுக்கு கடினமான பணியாக இருக்கும் எனத் தெரிகிறது.
யார் இந்த நயினார் நாகேந்திரன்?
நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டின் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக உள்ளார். 2001-2006 வரை அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார். அக்.16, 1960-ல் வடிவீஸ்வரத்தில் பிறந்த நாகேந்திரன், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். நெல்லை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, மின்சாரம், தொழில்துறை மற்றும் போக்குவரத்துத் துறைகளை வகித்து, கேபினட் அமைச்சரானார்.
2011-ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது நாகேந்திரன் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவர் முந்தைய ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா இறந்த உடனேயே, 2017-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் சேர்ந்தார். 2020 முதல் தமிழக பாஜகவின் துணைத் தலைவராகப் பணியாற்றிய நயினார் நாகேந்திரன், 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
சர்ச்சைகளில் சிக்கிய நயினார்:
2006-ல் நயினார் நாகேந்திரன் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததாக வழக்கு விசாரணையில் தெரியவந்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், 2010 ஆம் ஆண்டு ₹ 3.9 கோடி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .
'ஆண்டாள்' படம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக, 2018 ஜனவரியில் தமிழ் பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்துவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நயினார் நாகேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. 'இந்து மதத்தைப் பற்றி தவறாகப் பேசுபவர்களைக்' கொல்வதில் 'தயக்கம் காட்டக்கூடாது' என்றும் அவர் கூறியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.