மரியாதை நிமித்தமான சந்திப்பு - இ.பி.எஸ் சந்திப்புக்குப்பின் நயினார் நாகேந்திரன் பேட்டி

சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தப்பின் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தப்பின் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

author-image
WebDesk
New Update
epnai

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பு, மரியாதை நிமித்தமாக நடந்ததாக என்று நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை" எனக் குறிப்பிட்டார்.

Advertisment

மேலும், தனது சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், அரசியல் சூழ்நிலை குறித்து பழனிசாமியுடன் விவாதித்ததாகக் கூறினார். அரசியலில் நடிகர் விஜய் நுழைந்தது குறித்த கேள்விக்கு, “விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கியிருக்கிறார். அவர் வருவது பற்றி இப்போது கருத்து சொல்ல முடியாது” என்று பதில் அளித்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியானது என்றும் அவர் தெரிவித்தார்.   டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பழனிசாமி சந்தித்தது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தி.மு.க.வுக்கு நேரடிப் போட்டி என அறிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நயினார் நாகேந்திரன், "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது உறுதி. விஜய் தற்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். கூட்டம் வருவதை வைத்து தி.மு.க.வுக்கு நேரடிப் போட்டி என்றெல்லாம் சொல்ல முடியாது. தி.மு.க.வுக்குப் போட்டி தவெக என இப்போதே ஜோசியம் சொல்ல முடியாது" என்று குறிப்பிட்டார். மேலும் தி.மு.க ஆட்சியில் எந்த பணியும் நடக்கவில்லை என்றும், இதனால் அதிகாரிகளுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும்  வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பயணத் திட்டங்கள் குறித்து அறிவித்த நயினார் நாகேந்திரன், "அக்டோபர் 11-ஆம் தேதி மதுரையில் இருந்து எனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன்" என்று தெரிவித்தார். மேலும், இந்தப் பயணங்களில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும், "எடப்பாடி பழனிசாமியும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்" என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisment
Advertisements
Eps Nainar Nagendran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: