New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/09/Nalini-Chidambaram.jpg)
Nalini Chidambaram
எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்
Nalini Chidambaram
வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதில் கணக்கு காண்பிக்கவில்லை என வருமான வரித்துறை தாக்கல் செய்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை ஆஜராக விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் 5.37 கோடி ரூபாயும் அமெரிக்காவில் 3.28 கோடி ரூபாய் சொத்து வாங்கியுள்ளனர். இந்த விவரங்களை அவர்கள் தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வருமான வரிதுறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்விழி முன் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கு வரும் 3 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அப்போது நளினி உள்ளிட்ட மூன்று பேர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என நளினி சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடபட்டது.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நேரில் ஆஜராக விலக்கு அளிப்பதாக உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.