”நான் குற்றமற்றவள் என்பதில் நான் உறுதியாக இருந்ததால் இவ்வளவு நாட்கள் உயிரோடு இருந்தேன்” என்று நளினி கூறியுள்ளார்.
நேற்று முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்பட 6 பேரை நேற்று உச்சநீதிமன்ற அமர்வு விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பாகவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் பேரறிவாளன் தீர்ப்பு இவர்களுக்கும் பொருந்தும் என்று கூறிய உச்சநீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது. இந்நிலையில் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நளினி கூறுகையில் “ 30 வருடங்கள் சிறை வாழ்க்கையில் நான் உயிரோடு இருந்ததற்கு காரணம் நான் குற்றமற்றவள் என்பதில் எனக்கு உறுதி இருந்தது. சிறை வாழ்க்கை மிகவும் கொடுமையானது. சிறை வாழ்க்கை சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையை கற்றுக்கொடுத்தது “ என்று கூறியுள்ளார்.
இனி வரும் காலங்களை அவர் மகளுடனும் இருக்கபோவதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரது கணவர் முருகனும் நேற்று விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.