Advertisment

மணல் கடத்தல் விவகாரம்: காவல் நிலையத்தில் நாமக்கல் எம்.பி தர்ணா

மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரில் இருவர் மட்டும் கைது; காவல் நிலையில் நாமக்கல் எம்.பி தர்ணா போராட்டம்

author-image
WebDesk
New Update
namakkal mp chinraj

மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரில் இருவர் மட்டும் கைது; காவல் நிலையில் நாமக்கல் எம்.பி தர்ணா போராட்டம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றாவாளிகளை கைது செய்யக்கோரி நாமக்கல் மக்களவைத் தொகுதி எம்.பி., சின்ராஜ் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

   நாமக்கல் மக்களவைத் தொகுதி எம்.பி ஆக இருப்பவர் ஏ.கே.பி சின்ராஜ். இவர் இன்று (செவ்வாய்க் கிழமை) பரமத்தி வேலூர் காவல் நிலைய வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது பரமத்தி வேலூர் அடுத்த மணப்பள்ளியில் நேற்று இரவு காவிரி ஆற்றில் மணல் கடத்தல் சம்பவம் நடைபெற்றது. இதில் நான்கு பேர் பிடிபட்டனர். எனினும் இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

   புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா தலைமையிலான காவல்துறையினர் உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மற்ற இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து எம்.பி சின்ராஜ் போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.

   எம்.பி. ஒருவர் காவல் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மணல் கடத்தல் வழக்கில் பிடிபட்ட மற்ற இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Namakkal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment